வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் - ஆட்சியரிடம் இளைஞர் மனு

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் மாற்றுத்திறனாளி இளைஞர் புகார் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் கீரணத்தம் வடக்கு சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் பல்வேறு குறைகள் இருப்பதாகவும், இது குறித்த பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி அந்த குடியிருப்பில் வசிக்கும் விக்னேஷ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.29) மனு அளித்தார்.



பின் இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், அக்குமாடிகுடியிருப்பில் உள்ள 640 வீடுகளில் 120 வீடுகளுக்கு மட்டுமே குடிவந்துள்ளதாகவும், இங்குள்ள செப்டிக் டேங்க் இணைப்புகள் சரிவர கொடுக்கவில்லை என்றும், டேங் பைப் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தண்ணீர் குழாய்கள் போடுவதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடவில்லை என்றும், உபரி நீர் மோட்டார் மற்றும் இரண்டு சார்ட்டுகள் பழுதடைந்து 15 நாட்களுக்கு மேலாகியும் அதனை சரி செய்யவில்லை என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...