பண்ணைகிணறு ஊராட்சியில் மகளிர் உரிமை தொகை வழங்குவதில் பராபட்சம் - வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளதாக பெண்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள பண்ணைகிணறு ஊராட்சியில் கோழி குட்டை, முக்கூடு ஜல்லிப்பட்டி, கிராமங்களில் ஏழை எளிய மக்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் தொடர்ந்து பாரபட்சம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகின்றது.



இந்த நிலையில் பலமுறை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் ஊராட்சி மன்ற தலைவரிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்ட முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெண்கள் கூறியதாவது, மகளிர் உதவி தொகை எங்கள் கிராமத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடைக்காமல், வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் கிடைக்கிறது. மேலும் இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டும் உரிய பதிலளிக்காத காரணத்தால் இன்று வட்டாட்சியர் அலுவலகம் வந்துள்ளோம்.



ஆகையால் ஏழை எளிய மக்களுக்கு அதிகாரிகள் முறையாக களஆய்வு செய்து மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் உடுமலை வட்டாட்சியர் சுந்தரத்திடம் கிராம மக்கள் தரப்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. வட்டாட்சியர் சுந்தரம் சில தினங்களில் நேரில் ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...