கோவையில் தனியார் நிறுவன காவலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன் என்பவர் உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதி பகுதியிலுள்ள தனியார் கேபிள் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நிறுவனத்தில் கவலாளியாக பணியாற்றி வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு வந்த நிலையில் இன்று காலை ராமன் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் அலுவலக வாசலில் கிடந்துள்ளார்.
இதையடுத்து அப்பகுதியிலிருந்த சிலர் அளித்த தகவலில் பேரில் விரைந்து வந்த பந்தைய சாலை காவல்நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் தடையங்களை சேகரித்து மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.