போக்குவரத்துக்கு இடையூறு, பொது இடத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட குற்றங்களுக்காக மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தார் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை: நீலம்பூர் பைபாசில் சத்தியானந்த் நடத்தும் மைவி3 ஏட்ஸ் நிறுவன உறுப்பினர்கள் திரளாக ஒன்று கூடினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போக்குவரத்துக்கு இடையூறு, பொது இடத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு உள்ளிட்ட குற்றங்களுக்காக விஏஓ ராமசாமி தந்த புகாரின் அடிப்படையில் மை வி3 ஏட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மீது சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சத்தியானந்த் உள்ளிட்டோர் மீது 150, 341, 290 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மைவி3 ஏட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான சத்தியானந்த் உள்ளிட்டோர் மீது 150, 341, 290 உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.