மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை – கோவை ஆட்சியர் உறுதி

கரப்பாடி பிரிவு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் வீட்டுமனை பட்டா, நத்தம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 597 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவையில் கடந்த மாதம் மக்களுடன் முதல்வர் முகாமை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள கரப்பாடி பிரிவு பகுதியில் தனியார் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் வீட்டுமனை பட்டா, நத்தம், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 597 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இதில் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த பேட்டியின் போது, கடந்த மாதம் முதல்வரின் தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 19, ஆயிரம் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இதில் 50 சதவீத மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மனுக்கள் முறையாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்திற்குள் அனைத்து மனுக்கள் மீதும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த மாவட்ட ஆட்சித் தலைவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு சென்ற பொதுவான மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...