நில அளவை தகவல்கள் பற்றி அறிய தமிழ் நிலம் மொபைல் செயலி - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், நில அளவை தொடர்பான விபரங்களை, 'தமிழ்நிலம்' செயலி மற்றும் இணைய தளம் மூலம் பார்வையிடலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜன.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை, www.tnlandsurvey.tn.gov.in என்ற இணைய தளத்தை, NIC மூலம் உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்துடன் 'தமிழ் நிலம்' என்கிற மொபைல் செயலி இணைக்கப்பட்டிருக்கிறது.

இதில் பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், பட்டா மாறுதல் கோரி விண்ணப்பம் செய்வதற்கான, இணைய வழி சேவை தமிழ் நிலம் Citizen Portal https://tamilnilam.tn.gov.in/citizen/ இணைய தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. உட்பிரிவு மற்றும் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் செயல்படுத்த, தமிழ்நிலம் - ஊரகம் மற்றும் தமிழ்நிலம் - நகரம் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இதைத்தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர ஏதுவாக, மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க 'அ' பதிவேடு, அரசு புறம்போக்கு நில விபரம், புலப்படம், நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விபரங்களை எங்கிருந்தாலும் அறியும் வகையில், www.eservices.tn.gov.in என்ற இணைய தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விபரங்கள் போன்றவை பதிவிறக்கம் செய்ய, வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி, நகராட்சிகளின் விபரங்கள், இத்துறையின் சுற்றறிக்கைகள், அரசாணைகள் மற்றும் பரப்பளவு போன்றவற்றை அறியலாம்.

மேலும் பொதுமக்கள் நில அளவை தொடர்பான விபரங்களை, 'தமிழ்நிலம்' செயலி மற்றும் இணைய தளம் மூலம் பார்வையிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...