கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்று ஊர் திரும்பிய மாணவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு

தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்ட கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் மூன்று தங்கம், 5 வெள்ளி , 17 வெண்கல பதக்கம் வென்று அசத்தினர். வெற்றி பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கோவை: குஜராத் மாநிலத்தில் 13 வது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், கோவா, குஜராத் உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கட்டா, குமித்தே என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற கராத்தே போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், கேடட், சீனியர் அடிப்படையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்ட கோவை மை கராத்தே இன்டர்நேஷனல் கராத்தே பள்ளியை சேர்ந்த 25 மாணவ, மாணவிகள் மூன்று தங்கம், 5 வெள்ளி , 17 வெண்கல பதக்கம் வென்று அசத்தினர். வெற்றி பெற்று தற்போது கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து இதில் வெற்றி பெற்றவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...