பொள்ளாச்சியில் மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம்

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பாடுபடுவோம் என்றும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்களின் உரிமையை மீட்டெடுக்க பாடுபவோம் என்றும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கோவை: அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



மாநில தலைவர் ரமேஷ் ஐயா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.



தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்கான அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், முடி திருத்தும் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏனைய தொழில் புரிபவர்களின் உரிமையை மீட்டெடுக்கவும் அரசிடமிருந்து சலுகைகள் பெற்றுத் தரவும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் பாடுபடும், தமிழகத்தில் ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடத்தி உள் இட ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும், மருத்துவ சமூக மக்களைப் பிற சமூக மக்கள் வன்கொடுமை தாக்குதல், கொலை செய்தல் மற்றும் பெண்களை இழிவு படுத்துதல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், திரைப்படங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...