தெரு நாய்கள் வெறிபிடித்து திரிவதால் தெருவில் பொது மக்கள் நடந்து வரவே அச்சம்மடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி தெருவோர நாய்களுக்கு கருத்தடை ஊசிகள் போட வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவை: கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஜன.31) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை தெற்கு தொகுதியில் சமீப காலமாக தெரு நாய் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையோரங்களில் தெரு நாய்கள் குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
மேலும் சில தெரு நாய்கள் வெறிபிடித்து திரிவதால் தெருவில் பொது மக்கள் நடந்து வரவே அச்சம்மடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி தெருவோர நாய்களுக்கு கருத்தடை ஊசிகள் போடவும், நாய்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில தெரு நாய்கள் வெறிபிடித்து திரிவதால் தெருவில் பொது மக்கள் நடந்து வரவே அச்சம்மடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி தெருவோர நாய்களுக்கு கருத்தடை ஊசிகள் போடவும், நாய்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.