கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு

பிப்ரவரி 6 முதல் 27- ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06035), அன்று பிற்பகல் 2.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை-சென்னை இடையே பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதத்துடன் இந்த ரயிலின் சேவை முடிவடைய உள்ள நிலையில் பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிப்ரவரி 6 முதல் 27- ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னையில் இருந்து காலை 7.10 மணிக்குப் புறப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06035), அன்று பிற்பகல் 2.15 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.

இதேபோல, மறுமார்க்கமாக பிப்ரவரி 6-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்குப் புறப்படும் கோவை-சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண்:06036), அன்று இரவு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும்.

மேலும் இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...