செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளி இலவச கல்வி எனக் கூறி அதிக பணம் வசூலிப்பதாக பெற்றோர்கள் புகார்

பணம் வசூலிப்பதை கேட்டால் TC வாங்கிக் கொண்டு குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு தனியார் பள்ளி நிர்வாகம் கூறுவதாக புகார் கூறிய பெற்றோர்கள் இதுகுறித்து, குழந்தைகளுடன் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் பெரியார் நகர் பகுதியில் குளோபல் பாத்வேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வில்லேஜ் கம்யூனிட்டி பவுண்டேஷன் இப்பள்ளிக்கான நிதி உதவியை அளித்து வருகிறது.

ஆரம்பத்தில் இந்தப் பள்ளியில் இலவச கல்வி என்று கூறி தங்கள் குழந்தைகளை சேர்க்க செய்து தற்பொழுது ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டை நடத்துவதாகவும், இதனைக் கேட்க போனால் TC வாங்கிக் கொண்டு குழந்தையை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் கூறுவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பள்ளிக் குழந்தைகளுடன் பெற்றோர்கள் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.01) மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், ஆரம்பத்தில் பள்ளியில் இலவச கல்வி தருவதாக கூறி உறுதியளித்ததன் அடிப்படையில் தங்கள் குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்த்ததாகவும், அப்போது 100 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறப்பட்ட நிலையில் பின்பு 300, 600, 900 என 1800 ரூபாய் வரை கட்டணம் வசூலித்ததாகவும், 2023-24 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறிபிட்டுள்ளனர்.

மேலும் 2024-25ம் கல்வியாண்டில் வெளிநாட்டில் இருந்து நிதி வரவில்லை என கூறி குறைந்தபட்சம் 30,000 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 50,000 ரூபாய் வரை கல்வி கட்டணம் கேட்பதாகவும் கட்டணத்தைச் செலுத்த இயலாவிட்டால் பள்ளியில் இருந்து TC யை பெற்றுக் கொண்டு செல்லுமாறு கூறுவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த பள்ளி FCRA வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிட்டுள்ள பெற்றோர்கள், இந்த பள்ளியின் கட்டண பில்லில் பள்ளி கட்டணம் 100 ரூபாய் என்று இருக்கும் நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் இந்த பள்ளியின் டிரஸ்ட் உரிமத்தை அரசு தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதற்கான தீர்வு எட்டப்படாத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பள்ளியின் முதல்வர் சொர்ணலதாவை மாற்றம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். மனு அளிக்க வந்த பெற்றோர்கள் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு ஓரமாக சாலையில் அமர்ந்து கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலந்து சென்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...