குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்த முதல்வருக்கு கு.இராமகிருட்டிணன் நன்றி

தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை தந்தை பெரியார் திராவிட கழகம் வன்மையாக கண்டிப்பதாக கூறியுள்ளது.


கோவை: தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளாவது, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், திபெத், போன்ற வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக நிறைவேற்றும் சட்டம் அந்த நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கும், இலங்கையில் இருந்து வரும் தமிழ் இந்துக்களுக்கும் இந்தியாவில் குடியுரிமை இல்லை என்று புதிய குடியுரிமை திருத்த சட்டம் சொல்கிறது.

இலங்கைக்கு சென்று ஈழத் தமிழர்கள் வாழக்கூடிய பகுதிகளில் வீடு கட்டித் தருகிறோம், சாலை அமைத்து தருகிறோம், அவர்களுக்கு புனரமைப்பு பணிகளை செய்து தருகிறோம் என்று நாடகம் நடத்தும் மோடியின் பாஜக அரசு அதே ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் குடியுரிமை இல்லை என்று அறிவிக்கின்றது.

கிறிஸ்துவ நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து செல்லும் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள். அந்த நாடுகளின் குடியுரிமை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கிறிஸ்துவ நாடுகளில் குடியேறிய பிழைப்புக்காக சென்ற பார்ப்பனர்கள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஆகவும், இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும் கிறிஸ்தவ நாடுகள் அனுமதித்திருக்கிறது. ஆனால் தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை இந்துக்கள் என்று நம்பினாலும், இந்தியாவில் அவர்களுக்கு குடியுரிமை இல்லை என்ற நிலைப்பாட்டை இந்துக்களுக்கான கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...