குடியரசுத் தலைவர் உரைக்கு திருத்தங்கள் கோரி பி.ஆர். நடராஜன் எம்பி நோட்டீஸ் தாக்கல்

குடியரசுத் தலைவர் உரையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன் என்று பி.ஆர். நடராஜன் எம்பி தெரிவித்துள்ளார்.


கோவை: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சில திருத்தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைக்குழுத் தலைவர் பி.ஆர். நடராஜன் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இதன்மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர், பி.ஆர். நடராஜன், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சில திருத்தங்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதன் விவரங்கள் வருமாறு: குடியரசுத் தலைவர் உரையின் இறுதியில் கீழ்க்கண்டதைச் சேர்த்திட வேண்டும். இந்த உரையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்துவதன் காரணமாக அதிகரித்துவரும் வேலையின்மை, பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு குறித்து குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன்.

“விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த, அதிலும் குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது என்பதைக் குறிப்பிடவில்லை என்பதற்காக வருந்துகிறேன்.”

“இந்தியப் பொருளாதாரம் ஆழமான மந்தநிலையை நோக்கி சென்றுகொண்டிருப்பது பற்றி ஒன்றும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” “மணிப்பூர் பிரச்சனையைக் கட்டுப்படுத்திட டபுள் என்ஜின் அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது என்பது குறிப்பிடப்படாததற்காக வருந்துகிறேன்.”

“கூட்டாட்சித் தத்துவம் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறித்தும், மாநில அரசாங்கங்கள் மீது அரசமைப்புச்சட்டப் பங்கினை அரித்துவீழ்த்தும் விதத்தில் ஆளுநர்களின் மாளிகைகள் பயன்படுத்துவது அதிகரித்து இருப்பது குறித்தும், அதிகாரங்களை மையத்தில் குவிப்பதற்கான விருப்பம் அதிகரித்து வருவது குறித்தும் எதுவும் குறிப்பிடப்படாததற்கு வருந்துகிறேன்.” இவ்வாறு பி.ஆர். நடராஜன் அந்த நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...