காங்கேயம் சென்னிமலை சாலையில் வீணாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் - நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

குடிநீர் வீணாகும் இடத்தை சுற்றி நோய் தொற்றுகளை ஏற்படுத்த கூடிய வகையில் மிகவும் சுகாதாரமற்ற அசுத்தமாக உள்ளது. பிளாஸ்டிக் பைகள், மது மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கு பைகள், குப்பைகள் என முழுவதும் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீரும் மாசடைந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சென்னிமலை சாலையில் மின் மயானம் எதிரில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கின்றது. இந்த குழாயின் ஏர்வால் அதே இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஏர்வால்வில் கடந்த ஆறு மாதங்களாக பல லட்சம் லிட்டர் காவிரி கூட்டு குடிநீர் வீணாக சென்று சாக்கடையில் கலக்கின்றது.

கடந்த 6 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அந்த குழாய்களின் வழியே செல்லும் பெரும்பாலான தெருக்களுக்கும், குடியிருப்புகளுக்கும் முறையாக குடிநீர் செல்லாமல் சாலைகளில், கழிவுநீர் கால்வாய்களிலும் வெள்ளம் போல் குடிநீர் வழிந்து ஓடுகிறது.

நகராட்சி நிர்வாகம் அதை சரி செய்யாமல் சாக்கு பைகளை வைத்து அடைத்து வைத்துள்ளனர். அடைத்து வைத்திருந்தாலும் மேலும் குடிநீர் பீச்சி அடித்து வெள்ளம் போல் சாக்கடையில் கலந்து வீணாக செல்கின்றது. தற்போது குடிநீர் தட்டுப்பாடு காங்கேயம் பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் இவ்வளவு குடி நீரானது தினசரி சாக்கடையில் கலந்து செல்வது வேதனை அளிக்கிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் பல ஆண்டுகளாக காங்கேயம் நகராட்சியில் குடிநீர் பராமரிப்பு பணியில் பணிபுரியும் ஊழியர்கள் பணியிடை மாறுதல் ஆகாததே இதற்கெல்லாம் காரணம் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குடிநீர் வீணாகும் இடத்தை சுற்றி நோய் தொற்றுகளை ஏற்படுத்த கூடிய வகையில் மிகவும் சுகாதாரமற்ற அசுத்தமாக உள்ளது.

பிளாஸ்டிக் பைகள், மது மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், சாக்கு பைகள், அன்றாட வீட்டு உபயோக குப்பைகள் என முழுவதும் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதுடன் குடிநீரையும் மாசுபடுத்தி வருகிறது. மேலும் இந்த குடிநீர் குழையை மூடிவைத்திருக்கும் சாக்கு பயையை சுற்றியிலும் வனப்பகுதி நீர் தேக்கத்தில் இருக்கும் அட்டை பூச்சிகள் உள்ளது.

மேலும் இந்த பகுதியில் தான் புதிய நகராட்சி கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. மேலும் இது போலவே 20க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீரானது வீணாக சாக்கடைகளிலும், சாலைகளிலும் செல்கின்றது. எனவே இது குறித்து நகராட்சியும் மற்றும் நகராட்சி குடிநீர் வடிகால் துறை ஊழியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...