பட்டியலின மாணவி தாக்கப்பட்டதை கண்டித்து உடுமலையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தற்பொழுது சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக, பள்ளி கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்ற வருகின்றது என முன்னாள் அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் பட்டியல் இன மாணவி மீது கொடூர தாக்குதல் நடத்திய பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது, தமிழகத்தில் தற்பொழுது சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. குறிப்பாக, பள்ளி கல்லூரிகள் அருகில் கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெற்ற வருகின்றது.

தினமும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பட்டியலின மாணவி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய திமுக எம்எல்ஏ மகன் மற்றும் மருமகள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டம், இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தற்பொழுது திமுக அரசால் புறக்கணிப்பு செய்யப்பட்டு உள்ளதால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என பேசினார்.



கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருப்பூர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...