கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின்படி, கோவை மாநகராட்சியிலுள்ள 5 மண்டல பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தாத காரணத்தினாலும் மற்றும் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளையும் கண்டறிந்து கடந்த 26.10.2016 முதல் 24.03.2017 வரை தெற்கு மண்டலத்தில் 379 குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு மண்டலத்தில் 131 குடிநீர் இணைப்புகளும், வடக்கு மண்டலத்தில் 133 குடிநீர் இணைப்புகளும், மேற்கு மண்டலத்தில் 63 குடிநீர் இணைப்புகளும் மற்றும் மத்தியம் மண்டலத்தில் 103 குடிநீர் இணைப்புகளும் என ஆகமொத்தம் 809 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சொத்து வரி மற்றும் இதர வரிகள் செலுத்தாத நிலுவைதாரர்களின் குடிநீர் குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே, வரி செலுத்தாத நிலுவைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு மண்டலத்தில் 131 குடிநீர் இணைப்புகளும், வடக்கு மண்டலத்தில் 133 குடிநீர் இணைப்புகளும், மேற்கு மண்டலத்தில் 63 குடிநீர் இணைப்புகளும் மற்றும் மத்தியம் மண்டலத்தில் 103 குடிநீர் இணைப்புகளும் என ஆகமொத்தம் 809 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சொத்து வரி மற்றும் இதர வரிகள் செலுத்தாத நிலுவைதாரர்களின் குடிநீர் குழாய் இணைப்புகள், பாதாள சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகவே, வரி செலுத்தாத நிலுவைதாரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.