நொய்யலை ஆக்கிரமிக்கும் கழிவுப்பொருட்கள்- தூய்மை பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள்

கோவை மாவட்டத்தில் அழியும் தருவாயில் உள்ள பல்வேறு நீர்நிலைகளை தன்னார்வலர்களும், மாநகராட்சியும் இணைந்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக கோவையில் சமீபகாலமாக பல்வேறு நீர்நிலைகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.



அதனொரு பகுதியாக கடந்த இருநாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் அருகே நொய்யல் கரையோரம் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் நொய்யல் ஆற்றின் வழித்தடத்தினை ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் புகைப்படமும் கோவை மாநகராட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.



இதையறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரி லோகநாதன் மேற்பார்வையின் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த பிளாஸ்டிக், துணிகள், கிழிந்த படுக்கைகள், பாட்டில்கள், பயன்படுத்தப்படாத வீட்டு நுகர்பொருட்கள் போன்ற கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து நீர்நிலை மறுசீரமைப்பு தன்னார்வலர் குழுவினர் கூறுகையில், சில மக்களும், தன்னார்வலர்களும் இதுபோன்ற நீர்நிலைகளை காப்பாற்ற பணியாற்றி வருகின்றனர். நீர் நிலைகளை பாதுகாக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...