கோவை மாவட்டத்தில் அழியும் தருவாயில் உள்ள பல்வேறு நீர்நிலைகளை தன்னார்வலர்களும், மாநகராட்சியும் இணைந்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக கோவையில் சமீபகாலமாக பல்வேறு நீர்நிலைகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது.
.jpg)
அதனொரு பகுதியாக கடந்த இருநாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் அருகே நொய்யல் கரையோரம் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் நொய்யல் ஆற்றின் வழித்தடத்தினை ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் புகைப்படமும் கோவை மாநகராட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
.jpg)
இதையறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
.jpg)
இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரி லோகநாதன் மேற்பார்வையின் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த பிளாஸ்டிக், துணிகள், கிழிந்த படுக்கைகள், பாட்டில்கள், பயன்படுத்தப்படாத வீட்டு நுகர்பொருட்கள் போன்ற கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நீர்நிலை மறுசீரமைப்பு தன்னார்வலர் குழுவினர் கூறுகையில், சில மக்களும், தன்னார்வலர்களும் இதுபோன்ற நீர்நிலைகளை காப்பாற்ற பணியாற்றி வருகின்றனர். நீர் நிலைகளை பாதுகாக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
.jpg)
அதனொரு பகுதியாக கடந்த இருநாட்களுக்கு முன்பு ஆத்துப்பாலம் அருகே நொய்யல் கரையோரம் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் நொய்யல் ஆற்றின் வழித்தடத்தினை ஆக்கிரமித்திருப்பது கண்டறியப்பட்டது. இதன் புகைப்படமும் கோவை மாநகராட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
.jpg)
இதையறிந்த கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
.jpg)
இதனைத்தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற பணியாளர்கள் மாநகராட்சி அதிகாரி லோகநாதன் மேற்பார்வையின் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்த பிளாஸ்டிக், துணிகள், கிழிந்த படுக்கைகள், பாட்டில்கள், பயன்படுத்தப்படாத வீட்டு நுகர்பொருட்கள் போன்ற கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நீர்நிலை மறுசீரமைப்பு தன்னார்வலர் குழுவினர் கூறுகையில், சில மக்களும், தன்னார்வலர்களும் இதுபோன்ற நீர்நிலைகளை காப்பாற்ற பணியாற்றி வருகின்றனர். நீர் நிலைகளை பாதுகாக்க பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.