போதைப் பொருள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி அங்கலக்குறிச்சியில் மாரத்தான் போட்டி

10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ, மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் செயல்பட்டு வரும் விக்னேஸ்வரா தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.



போட்டியை ஆனைமலை காவல் ஆய்வாளர் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



இன்றைய காலகட்டத்தில் போதை பழக்கபழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்வை சீரழித்து வருகின்றனர். போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீள வேண்டும், மாணவ மாணவிகள் செல்போனில் மூழ்கிக் கிடப்பதால் ஞாபகத்திறன் குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் தவறாக வரும் பதிவுகளை பார்ப்பதனால் தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது. இதை மாணவ மாணவிகள் தவிர்க்க வேண்டும் என்று மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...