கோவை போத்தனூா் வழித்தடத்தில் எா்ணாகுளம்-டாடா நகர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

பிப்ரவரி 5 மற்றும் 12 -ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் டாடா நகா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 08189) புதன்கிழமை இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கேரள மாநிலம், எா்ணாகுளம்-ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.2) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிப்ரவரி 5 மற்றும் 12 -ஆம் தேதிகளில் (திங்கள்கிழமை) ஜார்க்கண்ட் மாநிலம், டாடா நகரில் இருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் டாடா நகா் - எா்ணாகுளம் சிறப்பு ரயில் (எண்: 08189) புதன்கிழமை இரவு 1.55 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.

மறு மார்க்கமாக பிப்ரவரி8, 15-ஆம் தேதிகளில் (வியாழக்கிழமை) எா்ணாகுளத்தில் இருந்து காலை 7.15 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - டாடா நகா் விரைவு ரயில் (எண்: 08190) சனிக்கிழமை காலை 4.35 மணிக்கு டாடா நகரைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், கூடூா், நெல்லூா், காவாலி, ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, பீமாவரம் டவுன், ராஜமுந்திரி, சாமல்கோட், பார்வதிபுரம், முனிகுடா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...