கோவை மாவட்டம், கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி வடக்கு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ்வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இயக்குநர் கே.பாஸ்கரன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் முன்னிலையில், ஊராட்சிகள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இவ்வாய்வின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் கூடுதல் இயக்குநர்கள் லட்சுமிபதி, முத்துமீனாள், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) டி.பிரியங்கா, திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, ஊராட்சி செயற்பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இவ்வாய்வின் போது, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் கூடுதல் இயக்குநர்கள் லட்சுமிபதி, முத்துமீனாள், மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) டி.பிரியங்கா, திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கருப்பையா, ஊராட்சி செயற்பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.