தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து 2024-ம் ஆண்டிற்கான புதிய பயிர் ரகங்கள் வெளியீடு

இந்த ஆண்டுக்கான 10 வகையான பயிர்கள், 10 தோட்டக்கலைப் பயிர்கள் என 20 வகையான பயிர் வகைகளை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி விவசாயிகள் முன்னிலையில் வெளியிட்டார்.


கோவை: கோவை வடவள்ளி சாலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் புதிய பயிர்கள் அறிமுகம் செய்து வருகின்றனர்.



அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான 10 வகையான பயிர்கள், 10 தோட்டக்கலைப் பயிர்கள் என 20 வகையான பயிர் வகைகளை வேளாண் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி விவசாயிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியான பெரும்பாலான ரகங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

வேளாண் பயிர்களில் நெல்லில் இருவழி வீரிய ஒட்டு இரகம் மற்றும் பாசுமதி அல்லாத வாசனை கொண்ட நீள் சன்ன 2 இரகங்களும், தானிய பயிர்களில் இனிப்புச் சோளம் உட்பட 4 புதிய இரகங்களும், பயறு வகைப்பயிர் பருத்தி மற்றும் பசுந்தாள் உரப்பயிர் தக்கைப்பூண்டு போன்ற பயிர்களில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டனர்.

தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மூன்று பழப்பயிர்கள் பன்னீர் திராட்சை, 5 காய்கறிப்பயிர்கள் கத்திரி, கொத்தவரை, வெள்ளைத்தண்டுக் கீரை, சிவப்புக்கீரை மற்றும் பல்லாண்டு முருங்கை வகைகள், சிவப்பு புளி மற்றும் தென்னையில் தலா ஒரு ரகமும் வெளியிடப்பட்டனர். விவசாயிகள் புதிய ரகங்களை சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டனர். இவ்வாறு துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...