கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குறிஞ்சேரி ஊராட்சியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு முகாம்

குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து முதல்மைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாமில் பொதுமக்கள் பதிவு செய்து கொண்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குறிஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது.



அப்போது பொதுமக்கள் குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல்கள், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுத்து பதிவு செய்து கொண்டனர்.



இந்த முகாமில் புதிதாக காப்பீட்டு அட்டை பதிவு செய்பவர்கள், ஏற்கனவே உள்ள மருத்துவ காப்பீட்டு அட்டை புதுப்பித்து கொடுத்தல், காப்பிட்டு அட்டை தவறவிட்டவர்கள், புதிய அட்டை பெறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.



இந்த முகாமில் வருவாய்துறை மூலம் வருமானச் சான்றிதழ் உடனடியாக வழங்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முகாமில் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம்.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி உட்பட ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...