அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தி அனுமதி வழங்கிட கோவையில் சிறப்பு முகாம்

அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தி அனுமதி அளிப்பது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி மூலம் வரும் 11.02.2024 மற்றும் 18.02.2024 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் மண்டல அலுவலகங்களில் நடத்த இருப்பதாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் காலம் இம்மாதம் பிப்ரவரி 2024 உடன் முடிவடைகிறது. எனவே, பொது மக்கள் 20.10.2016 முன்பு பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, கோயம்புத்தூர் மாநகராட்சி மூலம் வரும் 11.02.2024 மற்றும் 18.02.2024 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் மண்டல அலுவலகங்களில் நடத்த இருப்பதால், அதுசமயம் பொதுமக்கள் தங்களின் மனை ஆவணம், வரைபடம் மற்றும் வங்கி கணக்கிலிருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைனில் செலுத்தி இம்மாத இறுதிக்குள் உரிய காலகெடுவுக்குள் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து பயனடையுமாறும், மேலும் தங்கள் பகுதியில் அமையும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரைபடங்களை வரன்முறைப்படுத்திட பிரதான அலுவலகம் நகரமைப்பு பிரிவில் 23.02.2024-க்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்படி அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மாநகராட்சி மூலமாக வரன்முறைபடுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...