திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் போராட்டம்

வங்கியில் பணம் செலுத்த உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும், பட்டா வழங்குவதில் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருவதாகவும், தொடர்ந்து இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுபிறகும் கண்டுகொள்ளவில்லை என குடியிருப்போர் நலச் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 55வது வார்டுக்குட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கடந்த 1999 ஆம் ஆண்டு குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் அதனை எதிர்த்து நபர் ஒருவர் தொடர்ந்து வழக்கின் காரணமாக பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பிறகு வசிக்கும் பொது மக்கள் அரசு நிர்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசு நிர்ணயித்த கிரைய தொகையை செலுத்தி பட்டா பெற்றுக்கொள்ள வலியுறுத்தியது.



இதற்காக வங்கியில் பணம் செலுத்த உரிய ஆவணங்களை சமர்ப்பித்தும் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும், தொடர்ந்து இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுபிறகும் காலதாமதம் செய்யப்படுவதாக கூறி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் தங்களை நேரடியாக சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...