தென் குமாரபாளையம் கிராமத்திற்கு சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள தென்குமாரபாளையம் கிராமத்தில் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் அப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்கள் அனைத்தும் வறண்டு காணப்படுவதாக கூறப்படுகிறது.



மேலும் இந்த கிராமத்திற்கு குடிநீர் ஆதாரமாக உள்ள அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து நாளொன்றுக்கு 90 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்து இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை கிராம முற்றுகையிட்டு சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்து முறையிட்டனர்.

அம்பராம்பாளையம் ஆற்றில் தண்ணீர் இருந்தும் தற்போது மின்தடையும் ஏதும் இல்லாத போதிலும் தங்கள் கிராமத்திற்கு நாள்தோறும் ஒதுக்கப்பட்ட தண்ணீர் முறையாக வருவதில்லை எனவும், தற்போது தண்ணீர் வழங்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலானதால் அன்றாட தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், தண்ணீர் இல்லாத காரணத்தால் கிராமத்திலிருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், முறையாக குடிநீர் வழங்காமல் மெத்தனப் போக்காக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இன்னும் இரண்டு நாட்களில் தண்ணீர் வரவில்லை என்றால் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என முற்றுகையிட்ட கிராம மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...