சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு உடுமலையில் கார்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம்

பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை, கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை போக்குவரத்துதுறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு காரில் சீட் பெல்ட் அணிந்து பயணிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குட்டை திடலில் தொடங்கிய இந்த பேரணியை உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இதையடுத்து பேரணி தளிரோடு வழியாக சென்று பழைய பஸ்நிலையம், புதிய பஸ்நிலையம் ரவுண்டனா வழியாக ராஜேந்திராசாலை,கபூர் கான்வீதி, ரயில்வே மேம்பாலம், தளிரோடு உட்பட முக்கிய சாலைகள் வழியாக சென்று எலையமுத்தூர் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.



ஊர்வலத்தின் போது காரில் செல்வோர் சீட் பெல்ட் அணிந்து சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சாலை போக்குவரத்தின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன்,போக்குவரத்து ஆய்வாளர் ஜெயந்தி, ஓட்டுனர் பயிற்சி மையத்தைச் சேர்ந்த உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...