பன்னிமடை ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் - வெற்றி கண்ட 10 ஊராட்சிக் கவுன்சிலர்கள்

ஊராட்சி செயலர் செழியன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு திட்டங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், இதனால் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை எனக்கூறி 8 கவுன்சிலர்கள் பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தின் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை துடியலூரை அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் தங்கள் வார்டுகளுக்கு சரிவர பணிகளை ஒதுக்காத ஊராட்சிச் செயலரை மாற்றக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வெற்றி கண்ட 10 ஊராட்சிக் கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் பன்னிமடை, கஸ்தூரிநாயக்கன்புதூர், தாளியூர், கணுவாய், கே.என்.ஜி.புதூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ரத்தினம் பி.எஸ்.எம் மருதாசலம் தலைவராகவும் மற்றும் துணைத்தலைவர் அருள்குமார் உட்பட 15 ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். ஊராட்சி செயலாராக செழியன் என்பவர் உள்ளார்.



இந்த நிலையில் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலர் செழியன் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும், அரசு திட்டங்களை கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், இதனால் திட்டங்கள் முறையாக பொதுமக்களுக்கு சென்றடைவதில்லை, தங்கள் வார்டுகளுக்கு பணிகள் எதையும் ஒதுக்குவது இல்லை என்றும், அரசால் அறிவிக்கப்பட்டும் நலத்திட்டங்கள் மற்றும் முகாம்கள் குறித்து எந்த வித தகவல்களும் தெரிவிப்பதில்லை என்றும் கூறி ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார் தலைமையில் 8 கவுன்சிலர்கள் இன்று பன்னிமடை ஊராட்சி அலுவலகத்தின் உள்அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் அருள்குமார், சாந்தி சிவராஜன், ராமசந்திரன், கவிதா சிவகுமார், பி.டி.கோபாலசாமி, மாரித்தாய் சுந்தரராஜ், விஜயலட்சுமி பழனிசாமி, ஜெயமணி செல்வராஜ், முருகேசன், வாசுமணி உள்ளிட்ட 10 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டம் நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜென்கின்ஸ் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிக் கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் ஊராட்சி செயலரை மாற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கவுன்சிலர்கள் கூறினர்.

இதைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் உயர் அதிகாரிகளிடம் பேசினார். உடனடியாக ஊராட்சி செயலரை மாற்றுவதாக கவுன்சிலர்களிடம் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 10 ஊராட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து துணைத்தலைவர் கூறும்போது, ஊராட்சி செயலரை மாற்றுவதாக கூறியுள்ளனர். மாற்றவில்லை என்றால் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். இதனால் ஊராட்சி அலுவலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...