உப்பாறு அணை அலுவலகம் வளாகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் - போலீசார் குவிப்பு

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கடந்த 16-நாட்களாக உப்பாறு அணை விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தராஜ் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீர் திறக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என தெரிவித்து உப்பாறு பாசன விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் வருகின்ற 6-ம் தேதி செவ்வாய்க்கிழமைக்குள் தண்ணீர் திறக்கவில்லை என்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்து இருந்த நிலையில்.



இன்று 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் தெரிவித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...