தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று பொள்ளாச்சி திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தனித்திறமை, சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பொள்ளாச்சியில் இருந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மேதினி, மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதோவ் ஆகிய இருவர் தங்கப் பதக்கமும், மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் வெள்ளி பதக்கமும் வென்றனர்.


கோவை: ஹரியானா மாநிலத்தில் கடந்த ஜனவரி 31, பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிலம்பம் போட்டியில் தமிழ்நாடு சார்பில் 300 பேர் பங்கேற்றனர். இதில் தனித்திறமை, சண்டை உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பொள்ளாச்சியில் இருந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி மேதினி, மூன்றாம் வகுப்பு மாணவன் ஆதோவ் ஆகிய இருவர் தங்கப் பதக்கமும், மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தின் வெள்ளி பதக்கமும் வென்றனர்.

பதக்கம் பெற்று இன்று பொள்ளாச்சி வந்த மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர்களும், உறவினர்களும் மாலை மற்றும் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தற்காப்பு கலையான சிலம்பத்தை மாணவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்றதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றுனர் என்றும், கேலோ விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் விளையாட்டு சேர்க்கப்பட்டிருப்பதால் அதிலும் பங்கேற்று, மாணவர்கள் பதக்கங்கள் வெல்வதற்கு லட்சியத்தோடு இருப்பதாக பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...