கோவை வடவள்ளி இளைஞர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவு

ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த புகாரில், சபரி என்பவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.


கோவை: கோவையில் ஆபாசம் படம் பார்ப்பதாகக் கூறி பலரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாக மாநகர சைபா் குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சைபா் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இதில், கோவை வடவள்ளியைச் சோ்ந்த சபரி (23) உள்ளிட்ட 10 போ், சைபா் குற்றப் பிரிவு போலீஸார் என்றும், ஆபாச படம் பார்த்ததுக்கு வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும் என்றுகூறி பலரையும் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து சபரி உள்ளிட்ட 10 பேரையும் போலீஸார் அண்மையில் கைது செய்தனா். இந்தக் கும்பலுக்கு தலைமையாக சபரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இந்நிலையில், சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் ஆணையருக்கு சைபா் குற்றப் பிரிவு போலீஸார் பரிந்துரை செய்தனா்.

இதைத் தொடா்ந்து சபரி மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து, அதன் நகல் சிறையில் உள்ள சபரியிடம் நேற்று (பிப்.7) புதன்கிழமை வழங்கப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...