கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் திருட முயன்ற நபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியசாமி (39) என்பவர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் திருட முயன்றது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், வேறு எதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் (36). இவர் உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் “நியூராலஜி” வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.7) இவரது படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த பர்சை ஒரு நபர் நைசாக திருடினார்.

இதைப் பார்த்த மரகதம் சத்தம் போட்டார். பின் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அவரை விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியசாமி (39) என்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வேறு எதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...