கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் திருட முயன்ற நபர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியசாமி (39) என்பவர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் பணம் திருட முயன்றது போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், வேறு எதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி மரகதம் (36). இவர் உடல்நல குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் “நியூராலஜி” வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று (பிப்.7) இவரது படுக்கையில் தலையணைக்கு அடியில் வைத்திருந்த பர்சை ஒரு நபர் நைசாக திருடினார்.

இதைப் பார்த்த மரகதம் சத்தம் போட்டார். பின் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் அவரை விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முனியசாமி (39) என்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வேறு எதேனும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...