கோவையில் உள்ள தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் திரையரங்கம் இடிப்பு - ரசிகர்கள் வருத்தம்

இந்த திரையரங்கை இடிப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும், அரசோ அல்லது திரையுலகத்தினரோ முன்வந்து இந்த திரையரங்கிற்காக நினைவு சின்னம் ஒன்றை அமைத்து தர வேண்டுமென திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் ககோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள டிலைட் திரையரங்கம் தான் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் நிரந்தர திரையரங்கமாகும். 1914ம் ஆண்டு கட்ட இந்த திரையரங்கம் நூற்றாண்டு விழா கண்டும் செயல்பட்டு வந்தது. இந்தியாவில் எடுக்கப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் இங்கு தான் திரையிடப்பட்டது.

இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல், ஆங்கில திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இது தான் என்பதால் புகழ்பெற்ற இயக்குர்களின் அனைத்து திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன. இந்த திரையரங்கம் கோவையின் முக்கியமான அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

குறிப்பாக திரையுலகத்தினருக்கு முக்கியமான அடையாளமாகவும் திகழ்ந்துள்ளது. இந்த திரையரங்கம் துவங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பல திரையங்குகள் கட்டப்பட்டு நவீனமயம் ஆக்கப்பட்டும் இந்த திரையரங்கில் பெரும்பான்மையான வசதிகள் மாற்றம் செய்யப்படவில்லை. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் துவங்கி வண்ணப்படங்கள் என அனைத்து படங்களும் இங்கு திரையிடப்பட்டு வந்த நிலையில் புதிய புதிய திரையரங்குகள், நவீன தொழில்நுட்பங்கள் வர வர இந்த திரையரங்கிற்கு வருவதை மக்கள் குறைத்து விட்டனர்.

ஒரு கட்டத்தில் இந்த திரையரங்கிற்கு வருவதையே நிறுத்தி விட்டனர். இருப்பினும் 1980, 90-களில் வெளியான படங்கள் குறைந்த பார்வையாளர்களுடன் இங்கு திரையிடப்பட்டு வந்தது. தற்போது இந்த புகழ்பெற்ற திரையரங்கை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இது இந்த திரையரங்கில் படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இந்த இடத்தில் வணிக கட்டிடம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கூறுகையில் இந்த திரையரங்கை இடிப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அரசோ அல்லது திரையுலகத்தினரோ முன்வந்து இந்த திரையரங்கிற்காக நினைவு சின்னம் ஒன்றை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...