குன்னூர் நகர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ரூ.4,50,000 செலவில் நகரின் சந்தையில் முக்கிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 17 சி.சி.டி.வி கேமராக்களை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு திறந்து வைத்தார். இந்நிகழ்வில், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன் பேசுகையில், தற்போது பொருத்தப்பட்டுள்ள இந்த கேமிராக்கல் மூலம் வியாபாரிகள் குற்றங்களை தடுத்து மிகவும் நிம்மதியாக தங்கள் வியாபாரத்தில் கவனம் செலுத்த முடியும் என்று கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், ஏற்கனவே குன்னூர் வியாபாரிகள் சங்கத்தின் இலவச சேவை பிரிவின் மூலம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வகையில் தாங்கள் தவற விட்ட பொருட்களை கண்டுபிடுத்து கொடுக்கப்பட்டு உதவி வந்தது. இப்போது இந்த தொழில்நுட்ப சேவையின் மூலம் இன்னும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.
இது காவல் துறையினருக்கும் குற்றங்களை தடுப்பதிர் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.
மேலும், இந்த சேவையின் மூலம் செல்போனிலேயே காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்தமிழ், நகரத்தில் நடப்பதை எங்கிருந்து வேண்டாலும் பார்க்கும் வகையில் இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.