பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர்கள் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.



இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா வருகிற 25ம்தேதி நடைபெற இருகிறது. குண்டம் திருவிழாக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.

இந்த நிகழ்வில் கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானபூஜை 23ம் தேதி நள்ளிரவிலும், 25ம் தேதி காலை குண்டம் இறக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...