பொள்ளாச்சியில் திமுக சார்பில் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

இனி ஒரு முறை மோடி பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து உடுக்கை அடித்து நபர் ஒருவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


கோவை: விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தற்போது கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது கட்சிகள் புதுவிதமான தேர்தல் பிரச்சாரத்தை கையில் எடுப்பது வழக்கம்.

அதேபோல விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது.



திமுகவைச் சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேஷம் அணிந்து கையில் உடுக்கையோடு பொள்ளாச்சி நகர் பகுதி வீதிகளில் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.



பிரச்சாரத்தின் போது திமுக அரசு மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளதாகவும், கேஸ் விலையை உயர்த்தியது தான் மோடி செய்த ஒரே சாதனை என்றும், இனி ஒரு முறை அவர் பிரதமராகும் பட்சத்தில் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வார் என்றும் பிரச்சாரத்தின் போது அவர் பேசினார். இவருடன் பொள்ளாச்சி நகராட்சியின் 32வது வார்டு உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...