கோவை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் - ஒருவர் கைது

கோவை ரயில் நிலையம் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல் கிடந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: வட மாநிலத்தில் இருந்து கோவை வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக கோவை ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு (ஆர். பி. ஏப்) தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று (பிப்.9) கோவை ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது முதலாவது பிளாட்பாரத்தில் வந்து நின்ற ஒரு ரயிலில் சோதனை செய்தபோது இருக்கைக்கு அடியில் ஒரு பார்சல் கிடந்தது. அதைப் பிரித்து பார்த்தபோது அதில் 12 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்தான் அந்த கஞ்சாவை கடத்தி வந்ததவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் மருதமலையை சேர்ந்த கோவிந்தன் (வயது55) என்பது தெரியவந்தது. அவர் எந்த பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...