கோவையில் பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆய்வு

காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்டு, ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பார்வையிட்டார்.


கோவை: கோவை, காந்திபுரம் புதிய மேம்பால கட்டுமான பணிக்காக இடிக்கபட்ட "அருள்மிகு ஶ்ரீ கண்ணனுர் மாரியம்மன் கோவிலுக்கு" மாற்று இடம் ஒதுக்க வேண்டுமென தமிழக சட்ட சபையில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்திருந்தார். அதனை, தொடர்ந்து இன்று (பிப்.10) ஶ்ரீ கண்ணனூர் மாரியம்மன் புதிய கோவில் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பொதுமக்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.



பின்னர் கோவை தெற்கு தொகுதி 64-வது வார்டு மசால் லே அவுட் வீதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் அங்குள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.



இதைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டபட்டு வரும் மருத்துவ கட்டிடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின் மருத்துவமனையின் புதிய வசதிகள் மற்றும் தேவைகளை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.



மேலும் கோவை தெற்கு தொகுதி 69-வது வார்டு சாய்பாபா காலனியில் அமைந்துள்ள அண்ணா தினசரி மார்கெட்டில் புதிதாக வணிக வளாகத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...