செண்டுமல்லி பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும். நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள புங்கமுத்தூர், தளி, பாப்பனூத்து, பெரியகோட்டை, ராஜாவூர் உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை சீசனுக்காக கோழிகொண்டை, செண்டு மல்லி உட்பட பல்வேறு பூ சாகுபடிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த அளவு தண்ணீர் தேவை, சாகுபடி செலவு குறைவு, முகூர்த்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில் பரவலாக ஆண்டு முழுவதும் பகுதிகள் விவசாயிகள் சாகுபடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை பகுதியில் செண்டு மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாங்கி வருகின்றோம். ஏக்கருக்கு 12,000 நாற்றுகள் வரை நடவு செய்து 60 நாட்களில் பூ அறுவடையை துவக்கலாம். நடப்பு சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம்.
பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். விசேஷ நாட்களில் மட்டும் பூக்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றது. விசேஷம் இல்லாத நாட்களில் பூக்கள் வாங்காமல் கருகும் அபாயம் உள்ளதால் அரசு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
சொட்டுநீர் பாசன முறையில் குறைந்த அளவு தண்ணீர் தேவை, சாகுபடி செலவு குறைவு, முகூர்த்த சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்ற அடிப்படையில் பரவலாக ஆண்டு முழுவதும் பகுதிகள் விவசாயிகள் சாகுபடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, உடுமலை பகுதியில் செண்டு மல்லி சாகுபடிக்கு தேவையான நாற்றுகளை சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வாங்கி வருகின்றோம். ஏக்கருக்கு 12,000 நாற்றுகள் வரை நடவு செய்து 60 நாட்களில் பூ அறுவடையை துவக்கலாம். நடப்பு சீசனில் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் உள்ளோம்.
பூ சாகுபடி குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் நாற்றுகள் உடுமலை பகுதியில் மானியத்தில் கிடைக்க வேளாண் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். விசேஷ நாட்களில் மட்டும் பூக்கள் அதிகளவு விற்பனையாகி வருகின்றது. விசேஷம் இல்லாத நாட்களில் பூக்கள் வாங்காமல் கருகும் அபாயம் உள்ளதால் அரசு உரிய விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.