வால்பாறையில் ஐந்து இடங்களில் அதிமுக கட்சியினர் தெரு முனை பிரச்சாரம்

தமிழகத்தில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்வு, மின் கட்டண மும்மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பால் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை எடுத்துக்கூறி அதிமுகவினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி முன்னிலையில், நகர செயலாளர் மயில் கணேசன் தலைமையில் வால்பாறை, ரொட்டிக்கடை கருமலை, முடீஸ், சோலையார் அணை, ஆகிய பகுதிகளில் நிர்வாகிகள் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியினர் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 150 சதவீதம் உயர்வு, மின் கட்டண மும்மடங்கு உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, பால் மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்வு, சிறு குறு நடுத்தர புதிதாக பீக்ஹவர், நிலை கட்டணம் உயர்வால் தொழிலாளர்கள் வேலை இழப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு, போன்றவைகளால் மக்கள் அதிக சிரமப்படுகின்றனர் என்று அதிமுக கட்சியினர் மக்களிடம் தெருமுனை பிரசாரத்தில் பேசினார்.



இது காலையிலிருந்து மாலை வரை இந்த ஐந்து இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் அதிமுக கழக பேச்சாளர் புரட்சி தம்பி மற்றும் பி.லட்சுமி காந்த், நகரச் செயலாளர் மயில் கணேசன், தோட்டத் தொழிலாளர் பிரிவு மாநில தலைவர் வால்பாறை வி.அமீது, நகரத் துணைச் செயலாளர் பொன். கணேஷ் சலாவுதீன், ஆடிட்டர் சண்முகவேல், எம்.ஆர்.எஸ்.மோகன் சசி, ஐடிவிங் சண்முகம், அரசப்பன் ரொட்டிக்கடை பாபு, ரொட்டிக்கடை ரமேஷ், மஞ்சு பழனிச்சாமி, சீனி ராஜ், லோகேஸ்வரன், பழனியப்பன், ஜான் பீட்டர், விமலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...