அப்பநாயக்கன்பாளையத்தில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்

அப்பநாயக்கன்பாளையம், சுப்பிரமணியம்பாளையம், உருமாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் திமுக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.


கோவை: கோவை மாவட்ட மக்களை திமுக அரசு புறக்கணித்து வருவதாகவும், மத்திய அரசு தமிழக மக்களை மாற்றாந்தாய் மனபான்மையோடு நடத்துவதாகவும் கூறி அ.இ.அ.தி.மு. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கினங்க கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பாக பிப்ரவரி 7ம் தேதி முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சார கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக கோவை அப்பநாயக்கன்பாளையத்தில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் வார்டு செயலாளர் சாந்தி பூசன் அனைவரையும் வரவேற்றார். பகுதி செயலாளர் வனிதாமணி, கோவை தகவல் தொழில்நுட்ப வடக்கு மண்டல செயலாளர் மணிகண்டன், மருத்துவ அணி செயலாளர் Dr. துரை சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமைக் கழக பேச்சாளர் மணிமேகலை திமுக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர்.

இக்கூட்டத்தில் துடியலூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் கவிச்சந்திரன் மோகன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எம் ஆர் நாகராஜ், அம்மா பேரவை துணை செயலாளர் செல்வராஜ், துடியலூர் பகுதி வர்த்தக அணி செயலாளர் முத்து, 1வது வட்டக் கழகப் பிரதிநிதி பழனிசாமி, பொருளாளர் நந்தகுமார், துணைச் செயலாளர் ராஜகோபால், ராமசாமி, பாலாஜி, மோகன்ராஜ், கணேஷ், அண்ணா தொழிற்சங்க துடியலூர் பொதுச் செயலாளர் முருகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் வார்டு செயலாளர்கள் சுரேஷ்குமார் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் வரவேற்புரை வழங்கினர். பகுதி செயலாளர் வனிதாமணி எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி பகுடிஹ் செயலாளர் ரமேஷ், ஐ.டி.விங் செயலாளர் அரவிந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமைக் கழக பேச்சாளர் மணிமேகலை திமுக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர்.



இக்கூட்டத்தில் பாசறை செயலாளர் நவீன், துடியலூர் பகுதி அவைத் தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், கழக நிர்வாகிகள் செல்வி, வீரப்பன், தேவராஜ் மேஸ்திரி, கருப்புசாமி, பழனிச்சாமி, நடராஜ், மீனாட்சி சுந்தரம், கண்ணன், ஆட்டோ கருணாகரன், இந்திரஜித், நந்தகுமார், தேவகுமார், ஆனந்த், சரவணன், கார்த்தி, சிவக்குமார், ஹபிபுல்லா, ராஜி, சசிகலா, லாவண்யா, ஷாலினி, நாகராஜ், வெள்ளியங்கிரி, மணி, பட்டாளம், ஆறுமுகம், குட்டியம்மாள், கணேசன், துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

அதேபோல் கோவை உருமாண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் வார்டு செயலாளர் பந்தல் வீடு பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். பகுதி செயலாளர் வனிதாமணி, வக்கீல் ராஜேந்திரன் முன்னாள் எம்.பி. யூ.ஆர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் தலைமைக் கழக பேச்சாளர் மணிமேகலை திமுக அரசு மற்றும் மத்திய அரசைக் கண்டித்து உரையாற்றினர்.

இக்கூட்டத்தில், சி.டி.சி.செல்வம், எஸ்.ஆர்.ராஜா, சிவமூர்த்தி, நடராஜ், தம்பு மேஸ்திரி, அரவிந்த், ராஜ், கலாவதி, பானுமதி, சிவகுமார், நந்தகுமார், குமார், தாமரைசெல்வம், வெங்கட்சுப்பிரமணியம், ரமேஷ்குமார், அமிர்தம், மலர்விழி, சரோஜினி, யமுனாதேவி, சின்னக்கன்னு, குமார், சாமி வேலுசாமி, ஆனந்த், கோகுல், விஷ்ணு உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...