வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே கடந்த பிப்.9 ஆம் தேதி டூவீலர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் தந்தை மற்றும் குழந்தை உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் மாவட்ட காவல் துறையினால் "மெதுவாக செல்லவும்" என்ற வழிகாட்டு பலகை அங்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த வழிகாட்டு பலகையை மறைத்து ரியல் எஸ்டேட் பேனர் ஒன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற பேனர்களை பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்று (பிப்.12) கோரிக்கை வைத்துள்ளனர்.