ஊராட்சி செயலாளர் இல்லாததால் பள்ளபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் மூடல்

பள்ளபாளையம் ஊராட்சிக்கு உடனடியாக ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், பள்ளபாளையம் ஊராட்சியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றர். இந்த நிலையில் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பள்ளபாளையம் ஊராட்சிக்கு செயலாளராக நியமிக்கப்பட்ட சரண்யா என்பவர் பல வாரங்களாகவே முறையாக ஊராட்சிக்கு வருவதில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், வட்டார வளர்ச்சிதுறை அதிகாரி சுப்பிரமணியத்திடம் முறைப்படி விண்ணப்பம் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை காரணத்தால் இன்று ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் ஊராட்சி அலுவலகத்தை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் கூறும் பொழுது, பள்ளபாளையம் ஊராட்சியில் 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நாள்தோறும் வீட்டு வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வரும் நிலையில் ஊராட்சி செயலாளர் வராத நிலையில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இது குறித்து ஊராட்சி மன்ற கூட்டத்தில் நிரந்தரமாக செயலாளர் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் உடுமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் சுப்பிரமணியத்திடம் முறைப்படி கோரிக்கை மனுவும் அளிக்கபட்டது.

ஆனால் வட்டார வளர்ச்சி துறை அதிகாரி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றார். எனவே பள்ளபாளையம் ஊராட்சிக்கு உடனடியாக ஊராட்சி செயலாளர் நியமிக்கப்படவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊராட்சி செயலாளர் நிரந்தரமாக போடவில்லை என்றால் அனைவரும் ராஜினாமா செய்வோம் என முதலமைச்சர் தனிப்பிரிவு மாவட்ட ஆட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் புகார் கோரிக்கை மனு பதிவு செய்து தபாலில் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உடுமலை அருகே தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் என்பதால் பள்ளபாளையம் ஊராட்சிக்கு செயலாளர் நியமனம் செய்வதில் வட்டார வளர்ச்சித் துறை அதிகாரி அலட்சியம் காட்டுவதாக ஊராட்சி மன்ற தலைவர் புகார் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...