கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் பட்டமளிப்பு விழா

தமிழகம் முழுவதும் 15 பயிற்சி மையங்களில் பயின்ற முதியவர்கள் உட்பட 706 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கி வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் கடந்த 2005 ல் துவங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மற்ற பட்டபடிப்பு முடித்த மாணவர்கள், விவசாயிகள் ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்.



இந்நிலையில் தமிழகம் முழுவதும் 15 பயிற்சி மையங்களில் பயின்ற முதியவர்கள் உட்பட 706 மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு அரங்கில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட மாணவர்கள் தங்களது பட்டத்தை பெற்றனர். குறிப்பாக உரம் கடை வைத்திருப்போர் கட்டாயம் துறை சார்ந்த பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உரக்கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் ஒரு ஆண்டு படிக்கும் டிப்ளமோ அக்ரி இன்புட்ஸ் போன்ற படிப்புகளை கற்று தேரி பட்டம் பெற்றனர்.



இதில் 19 பெண்கள் உட்பட 49 பேர் மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பிடித்தனர்.

இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற 59 வயது முதியவர் ஒருவர் அனைத்து செமஸ்டர்களையும் எழுதி தேர்ச்சி பெற்ற நிலையில், அவர் இன்று பட்டம் பெற்றார். பி.ஏ பட்டதாரியான முதியவர் வயதான காலத்தில் பட்டம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், புதிய அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...