கோவையிலிருந்து காரிலேயே லண்டன் செல்லும் எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள்

கோவையைச் சேர்ந்த மீனாக்ஷி அரவிந்த், பொள்ளாச்சியைச் சேர்ந்த மூகாம்பிகா ரத்தினம் மற்றும் மும்பையைச் சேர்ந்த பிரியா ராஜகோபால் ஆகிய எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள் கோவையில் இருந்து லண்டனிற்கு காரிலேயே செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதன் துவக்க விழாவில் கோவை எஸ்என்ஆர் குழுமம் 'எக்ஸ்பிடி 2470' கொடியினை அசைத்து துவக்கி வைத்தது. 

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்,பி.வேலுமணி, அவினாசிலிங்கம் பல்கலைக் கழகதலைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் பிரிஜேஸ், ரூட்ஸ் குரூப் ஆப் கம்பெனி தலைவர் கே.ராமசாமி, ராமகிருஷ்ணா மற்றும் எஸ்என்ஆர் மேலாண்மை அரங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, இப்பயணத்தை மேற்கொள்ளும் மூன்று பெண்களுக்கும், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும், எக்ஸ்பிடியன்ஸ் குழுவில் இருந்து இருசக்கர வாகன ஓட்டுநர்கள் எக்ஸ்பிடியன்ஸ் பெண்களை வழியனுப்பும் விதமாக பெருந்துரை வரை உடன் செல்லவுள்ளனர்.

அந்த பெண்கள், இந்தியா சுதந்திரம் பெற்று 70 வருடங்கள் நிரைவுபெற்றதின் நினைவாக 70 நாட்களில் 24 நாடுகளை கடக்கவுள்ளனர். மேலும், ரோட்டரி இந்தியன் லிட்ரசி மிஷன் சார்பில் அனைவருக்கும் கல்வி திட்டத்தினையும் முன்வைத்து இப்யணத்தை மேற்கொள்கின்றனர்.

எக்ஸ்பிடியன்ஸ் பெண்கள் வரும் ஜுன் 5ம் தேதியன்று லண்டனை அடைய திட்டமிட்டுள்ளனர். 



இப்பயணத்தின் போது, கோவையில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிடியன்ஸ் பெண்களை புதுச்சேரி ஆளுநர் கிரன்பேடி அங்கிருந்து கொடியசைத்து அனுப்பிவைக்கவுள்ளார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...