ஒற்றை கையில் சிலம்பம் சுற்றியவாறு, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து கோவை வரை சென்று அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கோவை: கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் அரசு பேருந்தின் நடத்துனர் அறிவழகன். இவர் பொதுமக்களிடையே சாலை விதிகளை கடைபிடித்து விபத்துக்களை தவிர்ப்போம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் சமூக நோக்கத்துடனும், உலக சாதனை நிகழ்த்தும் வகையிலும் சைக்கிள் பயணத்தை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து இன்று (பிப்.13) துவக்கினார்.
அதன்படி ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி கோவை வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதன்படி ஒற்றை கையில் சிலம்பம் சுற்றி, மற்றொரு கையில் சைக்கிளை ஓட்டி கோவை வரை சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.