பொள்ளாச்சி அருகே நவமலை சாலையில் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையின் வீடியோ வைரல்

ஒற்றை காட்டு யானை இருசக்கர வாகனத்தை முட்டி தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒற்றை காட்டு யானை பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை சுற்றி தெரிகிறது. இது குறித்து வனத்துறையினர் ஏற்கனவே மலைவாழ் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் பொள்ளாச்சி அடுத்த கவியருவி அருகே உள்ள நவமலை சாலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை உலா வந்தது. மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை முட்டி சேதப்படுத்தியது. அந்த ஒற்றை யானை இரு சக்கர வாகனத்தை முட்டி தள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



ஒற்றை யானை பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளில் உலா வருவதால் பொதுமக்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...