பொள்ளாச்சி பேருந்து நிலையம் மற்றும் மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆய்வு

பொள்ளாச்சி பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வலியுறுத்தினார்.


கோவை: கோவை எஸ்பி பத்ரி நாராயணன் பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (பிப்.13) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பழுதடைந்த காவல் உதவி மையத்தை நகராட்சியுடன் கலந்து ஆலோசித்து தகுந்த இடத்திற்கு மாற்றி புது பொலிவுடன் சீரமைக்க அறிவுறுத்தினார்.



மேலும், பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாரை அவர் வலியுறுத்தினார். இதேபோல கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சோதனை சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி குற்றங்கள் நடவாமல் தவிர்க்க வேண்டும் என போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். உடன் டிஎஸ்பி ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...