பொள்ளாச்சி பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாருக்கு கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வலியுறுத்தினார்.
கோவை: கோவை எஸ்பி பத்ரி நாராயணன் பொள்ளாச்சி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று (பிப்.13) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பழுதடைந்த காவல் உதவி மையத்தை நகராட்சியுடன் கலந்து ஆலோசித்து தகுந்த இடத்திற்கு மாற்றி புது பொலிவுடன் சீரமைக்க அறிவுறுத்தினார்.

மேலும், பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாரை அவர் வலியுறுத்தினார். இதேபோல கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சோதனை சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி குற்றங்கள் நடவாமல் தவிர்க்க வேண்டும் என போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். உடன் டிஎஸ்பி ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.
மேலும், பேருந்து நிலையம் வளாகத்தில் அதிகளவிலான சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு போலீசாரை அவர் வலியுறுத்தினார். இதேபோல கோவை எஸ்பி பத்ரி நாராயணன் ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் சோதனை சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, சோதனை சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி குற்றங்கள் நடவாமல் தவிர்க்க வேண்டும் என போலீசாருக்கு அவர் அறிவுறுத்தினார். உடன் டிஎஸ்பி ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் இருந்தனர்.