கோவையில் கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் சார்பாக காதலர் தினம் கொண்டாட்டம்

கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர வேண்டும், ஆவணப்படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.


கோவை: பிப்ரவரி 14 என்றாலே நம் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். இந்த நாளில் காதலை வெளிப்படுத்துவதும், வெளிப்படுத்திய காதலுக்கு அங்கீகாரமாக திருமணம் செய்து கொள்வதும் ஆங்காங்கே நடக்கும்.

இந்த நிலையில் கோவையில் புதிதாக காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் உட்பட, காதலுக்கு ஆதரவாக இருப்போர் ஒன்றிணைந்து, காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில், அந்த இயக்கத்தின் முக்கிய கிளை அமைப்பான கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கம் சார்பாக, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், பெரியாரிய உணர்வாளர்கள், காதலர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டினர்.

இந்த பெரியார் படிப்பகத்தில் சாதி மத பேதமின்றி, 8,000 மேற்பட்ட சாதி மறுப்பு கலப்பு திருமணங்கள் நடந்திருக்கின்றன.



அவ்வாறு காதலர் திருமணம் செய்து கொண்டவர்களே, கேக் வெட்டி கொண்டாடி, சாதி மத பேதம் ஒழிய காதல் செய்வீர் என முழங்கினர்.



முழக்கத்தின் வாயிலாக, இட ஒதுக்கீட்டுக்கான உரிமை, ஆனவபடுகொலைக்கு எதிராக குழுமிய காதல் தம்பதிகள் உட்பட அனைவரும் முழங்கினர்.

கலப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தர வேண்டும், ஆனவபடுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கத்திற்கு அவர்கள் கோரிக்கை வைத்தனர். காதல் என்பது சமூகத்தில் இயல்யான இயற்கையான உணர்வு. அவ்வாறு காதல் செய்து மனம் முடித்தவர்களுக்கு உரிய மரியாதை, பாதுகாப்பு, அங்கீகாரம் தர அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...