மாநகராட்சி ஆரம்பப்பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் வழங்கியது

கோவை ஆர்.எஸ் புரத்தில் உள்ள கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் வழங்கப்பட்டது. இதனை ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால் துவங்கி வைத்தார். கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 146 குழந்தைகள் படித்து வருகின்றனர். 



இது குறித்து ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார் கூறுகையில்; ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் இன்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த மாநகராட்சி ஆரம்பப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு முன்னதாகவே ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. 



அந்த நிகழ்ச்சியின் போது இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எங்களிடம் கூறுகையில் எங்கள் பள்ளிக்கு விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள் இல்லை என்று தெரிவித்தார். அவர்களின் வேண்டுகோளை ஏற்று ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால் இத்திட்டத்தினை எடுத்து ரூபாய் 40 ஆயிரம் செலவில் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்களை வழங்கி உதவி செய்தார். அதேபோல் மெர்சி ஹோம், பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கும் விளையாட்டு மைதானத்தின் உபகரணங்கள், கழிவறை வசதிகள் போன்றவற்றை செய்து கொடுத்துள்ளோம்.   



இதனை ஆர்க் பவுண்டேஷன் ஏற்பாடு செய்தது கொடுத்தது. இதில், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் தலைவர் குருதீப் சிங், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் செயலாளர் ராம்குமார், ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் உறுப்பினர் அகர்வால், ஆர்க் பவுண்டேஷன் நிறுவனர் அபர்ணா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...